லஞ்சம் பெற்றுக் கொண்டு டுபாக்கூர் சான்று வழங்கிய ஏலகிரி விஏஓ! பறக்கும் புகார்கள்!

லஞ்சம் பெற்றுக் கொண்டு டுபாக்கூர் சான்று வழங்கிய ஏலகிரி விஏஓ! பறக்கும் புகார்கள்!

VAO - SIVAKUMAR

ம.பா.கெஜராஜ்,

 நிலத்தில் சம்மந்தமே இல்லாத நபர்களுக்கு  சுவாதீனம் இருப்பதைப் போன்ற டுபாக்கூர் சான்று வழங்கி வசமாய் சிக்கியிருக்கிறார் ஏலகிரி மலை விஏஓ சிவக்குமார்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை,நிலாவூர் கல்குவாரி அருகே கிராம சர்வே எண். 450/3 இல் உள்ள 2.00 ஏக்கர் நிலம் குள்ளன் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இது தொடர்பான வருவாய்துறை ஆவணங்களும் உள்ளன.  குள்ளன் திருமணம் இன்றி கடந்த 18.09.1979 ஆம் தேதியில் இறந்துவிட்டார். அவருக்கு வாரிசு யாரும் இல்லை. குள்ளனின் சகோதரர் கோவிந்த கவுண்டர் (எ) சின்ன எழவி. இவருக்கு ஜெயராமன் மற்றும் காளி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

  சகோதர்களான இருவரும்  காலம் சென்ற குள்ளனுடன் மேற்சொன்ன சர்வே எண்ணை அனுபவித்து வந்தனர்.   இந்நிலையில் சம்மந்தப்பட்ட இடத்தை வியாபார ரீதியாக பார்வையிட தேவன் என்பவரை சகோதரர்கள் அனுப்பிவைத்தனர்.

  நிலத்துக்கு சென்ற தேவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கூடியிருந்த ஒரு கோஷ்டி தேவனை புடைத்தெடுத்து விரட்டிவிட்டனர். இது எங்களுக்கு பாத்தியப்பட்ட நிலம். நாங்கள் தான் அனுபவித்து வருகிறோம் இதோ பார் விஏஓ சான்று என்று ஒரு கடிதத்தை காண்பித்து விரட்டிவிட்டனர்.

   தேவன் அந்த கும்பலிடமிருந்து தப்பிவந்து ஜெயராமனிடமும் காளியிடமும் முறையிட்டார். அதன் பின்னர் தான் ஏலகிரிமலை வீஏஓ வான சிவக்குமார் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்வராஜ், த.பெ.மாணிக்கம், (அனுமன் குமாரர்கள் கோபால், கிருஷ்ணன், ராஜி), கிருஷ்ணன், த.பெ.காளி, குப்புசாமி, த.பெ.ராமசாமி என்பவர்கள் பெயரில் சுவாதீன சான்று வழங்கியுள்ளார் என தெரிய வந்தது.

  இத்தனைக்கும் மேற்கண்ட நபர்களுக்கும் அந்த சொத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இந்த குறிப்பிட்ட நிலம் தொடர்பான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.

  அப்படியிருக்க, உள்ளூர்காரர்கள் மற்றும் லஞ்சப்பணம் ஆகியவற்றுக்காக விஏஓ சிவக்குமார் இப்படி ஒரு டுபாக்கூர் சான்றிதழை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

  இது குறித்து ஜெயராமனும் காளியும் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.

  அதுமட்டுமின்றி  ஆட்சியர் முதல் வட்டாட்சியர் வரைக்கும் வழகறிஞர் நோட்டிசு அனுப்பியிருக்கிறார்கள். அவற்றின் நகலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அவர்களின் பார்வைக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

  இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமையன்று இந்த புகார் மீதான விசாரணை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

  அப்போது உள்ளூர் நபரை விஏஓ வை நியமித்திருப்பதாலேயே அவர் இப்படி லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார் என்றும், டுபாக்கூர் சுவாதீன சான்றை ரத்து செய்ய வேண்டும் எனவும் புகார்தாரர்கள் தரப்பில் விசாரணை அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளனராம்.

ஆக மொத்தம் டுபாக்கூர் சான்றளித்த விஏஓ வுக்கு சங்குதான்.

இது தொடர்பாக விஏஓ சிவகுமார் அவர்களிடம் விளக்கம் கேட்க முற்பட்டோம் ஆனால் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. 

இதன் பின்னர் அவர் விளக்கம் அளிப்பார் எனில் அது குறித்து பரிசீலித்து பிரசுரம் செய்யப்படும் .