டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை! ஆட்சியர் தகவல்!

ஜி.கே.சேகரன்,
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது - காட்பாடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவிற்கு பின் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேட்டி.
வேலூர்மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மதி வண்டி மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கு விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.
இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மாமன்ற உறுப்பினர் அன்பு, மண்டல குழு தலைவர் புஷ்பலதா,காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் 11 ஆம் வகுப்பு பயிலும் 10500 மாணவ,மாணவிகளுக்கு ரூ.11. 5 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டியை இந்த ஆண்டு வழங்கவுள்ளோம் 89500 மாணவ,மாணவிகள் அரசு பள்ளியில் பயிலுவோருக்கு இலவச சீருடையும் இக்கல்வி ஆண்டில் வழங்கவுள்ளோம் அதனை துவங்கியுள்ளோம் என பேசினார்.
பின்னர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒவ்வொரு டெங்கு பாதிப்பும் தகவல் பெறப்பட்டு அப்பகுதியில் ஆய்வை செய்து அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துகொண்டிருக்கிறோம். ஓரளவு டெங்கு கட்டுபாட்டில் உள்ளது.
தனியார் மருத்துவ மனைகளிலும் டெங்கு பாதிப்போர் தகவலை தெரிவிக்க சொல்லியுள்ளோம். ஆடிக்கிருத்திகை உள்ளூர் விடுமுறை என்பது அந்தந்த ஒரு சில பகுதியின் தலைமை ஆசிரியர்களே அப்பள்ளிக்கு மட்டும் விடுமுறையை வழங்கி வேறு சனிக்கிழமையில் பள்ளியை நடத்தலாம் என கூறியுள்ளது.
இம்மாவட்டத்தில் இடிந்த 27 அரசு பள்ளி கட்டிடங்களை நபார்டு திட்டம் மூலம் கட்டி முடிக்க கோரியுள்ளோம். பல்வேறு நிதிகளிலிருந்து புதிய கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளிகளின் நிர்வாக குழுக்கள் வகுப்பறைகள் வேண்டுமென கோரும் தீர்மானங்கள் குறித்தும் பரிசீலித்து வருகிறோம் இந்த ஆண்டிற்குள் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சொன்னார்.