சிப்காட் அமைக்க இடம் தேர்வு!

சிப்காட் அமைக்க இடம் தேர்வு!

க.பாலகுரு,

 திருவாரூர் மாவட்ட கரையபாலையூர்  ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆ£. பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோரிடம் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

 விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் விவசாயிகள் ஒப்புதல் இருந்தால் மட்டும் வளர்ச்சிகள் வரும்  என தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கரையபாலையூர் ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  டிஆர்பி. ராஜா ,  மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீதிருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன்ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் இந்த இடத்தில் பல ஆண்டு காலமாக விவசாயம் செய்துவருகிறோம் ஆகையால் இந்த இடத்தில் தொழில் பூங்கா அமைக்காமல் மாற்று இடத்தில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என   தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜாவிடம் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா தற்போது இடத்தினை பார்ப்பதற்கு மட்டும்தான் வந்துள்ளோம், விவசாயிகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அனைவருக்கும் வேலை கிடைப்பதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் டிஆர்பி. ராஜா  தெரிவித்ததாவது -

முதலமைச்சராக  பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டி முதலீடுகள் வந்துள்ளது. மேலும் 32 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார்

தமிழ்நாட்டில் அனைத்து பகுதி மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறா£.,

விவசாய பெருங்குடி மக்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டைகள் கொண்டுவரப்பட்டுவருகிறது.

தொழில் முதலீடுகள் தொடர்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் செல்ல முதலமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம் ,

குறிப்பாக மூன்று நான்கு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது.விவசாய நிலங்களையும் விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில்.விவசாயிகளின் ஒப்புதலோடு வளர்ச்சி வரும் என  தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் :- கோட்டாட்சியர் சௌமியா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.