பல்லை புடுங்கி தான் விசாரிப்பீங்களா! போலிசார் மீது புகார்!

ஆர்.செல்வராஜ்,
விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்ததாக போலிசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவை நடப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
இதை உறுதிபடுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அப்படியிருக்க விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமதுசபீர் ஆலமை நியமித்து உள்ளார். இதற்கிடையே சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங்கிடம் தொலைபேசியில், பற்களை பிடுங்கியது தொடர்பாக விளக்கம் கேட்ட உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.