காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கள்ளச்சாராய டியூப்கள்! உடனடியாக அழிப்பு!

  கு.அசோக்,

அல்லேரி ஜடையான் கொள்ளை மலைப்பகுதிகளில் 800 லிட்டர் சாராய ஊரல்களை காவல்துறையினர் அழித்தனா.  ¢  வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு காவல்துறையினர் கள்ளச்சாராயம் ஒழிப்பு பணி மேற்கொண்டனர்.

 அந்த வகையில், அனைக்கட்டு அருகேயுள்ள அல்லேரி மலைப்பகுதி மற்றும் ஜடையான் கொள்ளை மலைபகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊரல்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

  மேலும் காய்ச்சிய பட்டை சாராயத்தை வெளி பகுதிகளுக்கு சப்ளை செய்வதற்காக லாரி டியூப்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.  அவற்றையும் கைப்பற்றிய காவல் துறையினர் இவற்றை கீழே ஊற்றி முற்றிலுமாக அழித்தனர்.

  இந்நிலையில் இதற்கு காரணமானவர்கள் காட்டுக்குள் ஓடி மறைந்துக் கொண்டனர். அவர்களை கைது செய்வதற்காக வனத்துறையினரின் உதவியுடன் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.