தோல் தொழிற்சாலையில் 49 லட்சம் மோசடி! ஏழு பேர் கைது!!

கு.அசோக்,
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை உள்ளது. அங்கு 49 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் காலணி உற்பத்தி செய்யும் மூலப் பொருட்கள், டாட்டா ஏசி வாகனம் பறிமுத செய்யப்பட்டது. மேலும் ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைதானார்கள்.
திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்ன வரிக்கம் பகுதியில் பாம்ஸ் ஆக்டிவ் பிரைவேட் லிமிடெட் என்கிற உள்ளது. இந்த தோல் தொழிற்சாலையில் கே.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின், துத்திபட்டு கலைஞர் நகரை பகுதியை சேர்ந்த முகமது லியாகத் ஆகியோர் பிளானிங் டிசைனர் செக்க்ஷனில் பணிபுரிகின்றனர்.
கடந்த 2022 முதல் 2024 வரை தோல் மற்றும் அதற்கான மூலப் பொருட்களை வாங்குவதில் 49 மோசடி செய்துள்ளதாக தொழிற்சாலையில் நடந்த ஆடிட்டிங் கில் தெரியவந்தது.
அதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் யாஸ்மின், முகமது லியாகத் , ஜலால்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக், சின்ன வரிக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி, ஆம்பூர் வளேல்காரர் வீதியைச் சேர்ந்த நியாஸ் அஹமத், வெங்கடசமுத்திரம் சர்ச் தெருவை சார்ந்த அம்பேத்கர்பெத்தலகேம் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.