பக்தர்கள் வாகனத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர்! கலெக்டர் கடும் எச்சரிக்கை!

கு.அசோக்,
சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்த அளவு மட்டுமே சுங்கம் வசூலிக்க வேண்டும் ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்து அறிவுறுத்தல்.
இராணிப்பேட்டை மாவட்டம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை திருவிழா நடைபெற்று வருகிறது.
தமிழகம் ஆந்திர தெலுங்கானா கர்நாடகா பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் யோக நரசிம்மர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனத்திற்க்கு சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒப்பந்ததாரர் வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நிர்னைத்த விலையை விட கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணம் மட்டும் வசூலிக்க வேண்டும் தொடர்ந்து புகார் வந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்து கடுமையா நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆணையர் ஹேமலதா உடன் இருந்தனர்.