விதியை மீறி சரக்கு வேனில் பயணித்த 26 பேர் படுகாயம்!

கு.அசோக்,
சரக்கு வேனில் சென்ற போது மரத்தில் மோதி விபத்துவிபத்தில் 26 நபர்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராம பகுதியை சேர்ந்த 26 நபர்கள் திருற்பாற்கடல் பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மினி சரக்கு வேனில் சென்றனர்.
வளவனூர் பகுதி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 26 நபர்களும் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரக்கு வண்டியில் மனிதர்களை ஏற்றிச்செல்லக்கூடாது என்கிற விதிகள் இருந்தும் கூட இப்படி விதிமீறி பயணிப்பதால் விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.