இளம் பெண் கொலையா? தற்கொலையா?

இளம் பெண் கொலையா? தற்கொலையா?

ஜி.கே.சேகரன்,

திருமணமாகி நான்கு மாதங்களை ஆன நிலையில் வரதட்சனை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை, பெண்ணின் கணவன் மீது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மீனாட்சி (23) என்பவரும் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் விஜய் (28)ஆகிய இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

  இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் மீனாட்சிக்கு அவருடைய பெற்றோர்கள் திருமணத்திற்காக ஓரளவுக்கு நகை மற்றும் சாமான்கள் உள்ளிட்ட வரதட்சணைகளை கொடுத்துள்ளனர்.

  ஆனால் விஜயின் குடும்பத்தார் மீனாட்சிக்கு பெற்றோர்கள் கொடுத்த வரதட்சணை போதுமானதாக இல்லை எனவும் வரதட்சணையாக நகை பணம் அதிகஅளவு வேண்டும் என மீனாட்சியை அடிப்பது தகாத வார்த்தைகளால் திட்டுவது மேலும் மீனாட்சியின் கணவர் புகை பிடித்து விட்டு சிகரெட்டால் சுடுவது என மீனாட்சியை கொடுமை செய்து வந்துள்ளனர்.

  பின்னர் இது குறித்து மீனாட்சி தன்னுடைய பெற்றோருக்கு இந்த தகவலை பலமுறை கூறியதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் விஜயின் தம்பி விக்கி சித்தூர் பகுதியில் கூலிவேலை செய்து கொண்டிருந்த மீனாட்சியின் தந்தையிடம் மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

   தகவல் அறிந்து விரைந்து வந்த மீனாட்சியின் தந்தை முரளி தன் மகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் தன்னுடைய மகள் மீனாட்சிக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக மீனாட்சியின் கணவர் விஜய் மீது புகார் கொடுத்துள்ளார்.

   புகாரின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் பணம், நகை கேட்டு வரதட்சனை கொடுமை செய்து பெண்ணை கொடுமைப்படுத்தியதால் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.