காட்டன் சூதாட்ட உரிமையாளர்களை பிடியுங்களேன்!

காட்டன் சூதாட்ட உரிமையாளர்களை பிடியுங்களேன்!

 ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.-கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக கிராமிய காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் கிடைத்து.

 அதன் பேரில் உதயேந்திரம் பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்

அப்போது அங்குள்ள ஒரு இடத்தில்  3 பேர் காட்டன் நம்பர் எழுதி கொடிருந்ததை கண்ட போலீஸார் அவர்களில் இருவரை கைது செய்து விசாரித்த போது உதயேந்திரம் பகுதியை சேர்ந்த பாண்டியன்(42)விஷ்ணு(24) என்பது தெரிய வந்தது., பின்னர் அவர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

 ஆனால் நடுபட்டறை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் தப்பி சென்ற நிலையில் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் இது போன்ற காட்டன் சூதாட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர்,முஸ்லீம்பூர், சலாமாபாத், புதூர், காமராஜ்புரம் உள்ளிட்ட  பகுதிகளில் அமோகமாக நடைபெற்று வருவதை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடுத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

  இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், காட்டன் பிசினஸை செய்து வரும் முதலாளிகளையும் போலிசார் கைது செய்தால் தான் எங்களுக்கு நம்பிக்கை வரும், இந்த காட்டன் சூதாட்டமும் ஒழியும் என்கிறார்கள்.