அடேங்கப்பா மேயர் ப்ரியா:- ப்ரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி நாடுகளுக்கு செல்கிறார்!

அடேங்கப்பா மேயர் ப்ரியா:- ப்ரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி நாடுகளுக்கு செல்கிறார்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

சென்னை மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மேயர் ப்ரியா ப்ரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி நாடுகளுக்கு செல்கிறார்.

 தனது சுறுசுறுப்பான செயல்பாட்டால் குறுகிய காலகட்டத்தில் சென்னை மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மேயர் ப்ரியா. ஓராண்டை கடந்து வெற்றிகரமாக களப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஏதுவாக 'மக்களை தேடி மேயர்' என்கிற ஸ்கீமை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.

 சிங்கார சென்னை 2.0, மாநகர் முழுவதும் உள்ள இலவச கழிவறை மேம்பாடு, மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பில் புதிய திட்டங்கள், புதிய பூங்காக்கள், சுகாதார மையங்கள் உள்ளிட்டவையே அதற்கு சாட்சி.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பின்பற்றி சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்த திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். ஆட்சிக்கு வந்த பின்னர், இதனை மாற்றி 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என மாற்றினார்.

 இதுதவிர மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்டவை பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

 இதே பாணியில் மக்களுக்கு நேரடியாக சென்று பயனளிக்கும் வகையில் 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்து ஒவ்வொரு வார்டாக செயல்படுத்தி வருகிறார்.

 அதே போல், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டாலினை பின்பற்றி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.

 அந்த வகையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தும் வகையில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுமாம்.

   இந்த பயணத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் ஐஏஎஸ், தலைமை பொறியாளர் என்.மகேசன், செயற்பொறியாளர் விஜய் அரவிந்த் ஆகியோர் இடம்பெறுவர் எனத் தெரிகிறது.

   அப்படியிருக்க தங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சிறப்பாக அமையும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 முதல்வரைப் போலவே மாநகர மக்களின் பரிபூரண வாழ்த்துக்களையும் ப்ரியா ராஜன் பெற்றுள்ளார்.