போதை மாத்திரை விற்ற மெடிக்கல் ஷாப்புகளின் உரிமம் ரத்து!

போதை மாத்திரை விற்ற மெடிக்கல் ஷாப்புகளின் உரிமம் ரத்து!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

போதை மாத்திரை விற்ற மெடிக்கல் ஷாப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

  சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 117 மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 கடைகளுக்கு விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது''.