பொது சிவில் சட்டம்  உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றம்!

பொது சிவில் சட்டம்  உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றம்!

  ம.பா.கெஜராஜ்,

 அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை, பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உட்பட திருமணம், விவாகரத்து, பரம்பரை சொத்துரிமை, தத்து எடுத்தல் ஆகிய முக்கிய விஷயங்கள் இந்த சட்டத்தின் மைய பொருளாக கொண்ட பொது சிவில் சட்டம் தீபாளி முடிந்ததும் உத்தரகாண்ட் மாநில சட்டபேரவையில் நிறைவேறப்போகிறது.

  உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஒரு வாரத்தில் சட்டசபையின் சிறப்பு தொடர் கூட்டப்பட உள்ளது.

 இந்த கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சி எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவுமகவும், அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையியில் இந்த மசோதாவிற்கான வரைவில் இடம்பெறும் பல அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளிய

 இருப்பதாக தெரிகிறது. இதில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18லிருந்து 21 என அதிகரிக்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் திருமண வயது 18 என்பதில் இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தற்போது தெரிகிறது.

இருதார மற்றும் பலதார தடை, 'லிவ்-இன்' வாழ்கை முறையை கட்டாய பதிவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்பதால் இந்த மசோதா சட்டமாவதற்கு முன் பல காரசார விவாதங்க வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

   உத்தரகாண்ட் மாநிலத்தை பாஜக ஆட்சி செய்வதால் அதில் இந்த மசோதாவை கொண்டு வந்து ஆளுநர் மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டிருக்கிறதாக தகவல்கள் கூறுகின்றன.