வட்டாட்சியர் அலுவலகத்தில் வளைகாப்பு!

கு.அசோக்,
வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு வளைகாப்பு நடத்தி அசத்திய வருவாய்த்துறையினரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கத்தியவாடி பகுதியை சேர்ந்த ஜான்சிராணி இவர் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஜான்சிராணி மகப்பேறு விடுப்பில் செல்ல இருப்பதால் வட்டாட்சியர் அருள்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் அவருக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வளைகாப்பு நடத்தினர்.
அந்த வகையில் அனைத்து வருவாய்துறை அதிகாரிகளும் ஒன்று திரண்டு குடும்ப உறுப்பினருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது போல் தடபுடலாக நிகழ்ச்சி நடத்தி தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.