கூட்டணி முறிவு டிராமாவை காப்பாற்ற இன்னொறு டிராமாவா? டெல்லியில் அண்ணாமலை!

கூட்டணி முறிவு டிராமாவை காப்பாற்ற இன்னொறு டிராமாவா? டெல்லியில் அண்ணாமலை!

ஜி. சாந்தகுமார்

 தமிழக நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு டெல்லிக்கு பறந்த அண்ணாமலை பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி. நட்டாவையும், அமித் ஷாவையும் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேற்று சந்தித்து பேசியிருக்கிறார்.

 அண்ணாதுரையை பற்றி அண்ணாமலை கூறிய கருத்தால் ஆத்திரமடைந்த அதிமுக, தங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டதாக சொல்கிறாது. தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுக வுடன் கூட்டணி இருந்ததை பாதுகாக்க தவறிவிட்டதாக அண்ணாமலை மீது பாஜக மேலிடம் கோபத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.

 அப்படியிருக்க அண்ணாமலையை பாஜக தலைமை இன்று நேரில் அழைத்தது. அதிமுக உடனான கூட்டணி முறிந்தது குறித்து விளக்கம் கேட்பதற்காகவே அவரை டெல்லி மேலிடம் அழைத்ததாக கூறப்படுகிறது.

 அவர் நேற்று முன்தினம்  இரவு ஜே.பி. நட்டாவையும், அமித் ஷாவையும் அண்ணாமலை சந்தித்து விளக்கம் அளித்தார்.

 குறிப்பாக சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

  அதன் பின்னரே டெல்லியில் நேற்று மாலை 6 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உடனான கூட்டணி முறிந்தது பற்றி இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

   இது குறித்து அரசியல் பார்வையாளர் ஒருவர் தெரிவிக்கையில் கூட்டணி முறிவு என்கிற டிராமாவை உறுதிபடுத்திக்கொள்ள இன்னொறு டிராமா போடுகிறார்கள் என்கிறார்.