மிருகமா? மர்ம மனிதரா? மக்கள் பீதி!

மிருகமா? மர்ம மனிதரா? மக்கள் பீதி!

 கு.அசோக்,

 அரக்கோணம் அடுத்த கைனூரில், சிறுத்தை போன்ற மர்ம விலங்கை நேரில் பார்த்த பெண் வீட்டை பூட்டிக் கொண்டு குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைனூரில் நேற்று இரவு சிறுத்தை போன்ற மர்ம விலங்கு ஒன்றை பெண் ஒருவர் பார்த்துள்ளார். இதில் அவர் அதிர்ச்சி அடைந்து தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டை பூட்டிக்கொண்டு அரக்கோணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இந்த தகவல் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டாருக்கும் பரவியது. ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

   வனவர் துரைமுருகன் அவரது உதவியாளர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்திய  வனத்துறையினர் கூறுகையில்,  இங்கு சிறுத்தை போன்ற மர்ம விலங்குகள் வந்ததற்கான நடமாட்டம் ஏதும் இல்லை.  அதற்கான முகாந்திரமே தெரியவில்லை என்றனர்.

  மர்ம விலங்கு வந்ததாக சொல்லப்படும் வீட்டின் எதிர் வீட்டை சேர்ந்த பெண்  கிரேசி கூறியதாவது இரவு 7.30 மணிக்கு எங்கள் வீட்டின் ஓரம் உறுமும் சத்தம் கேட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் எதிர் வீட்டை சேர்ந்த பெண்ணும் சிறுத்தை போன்ற உருவத்தைப் பார்த்ததாக தெரிவித்து அலறினார். அதற்கு பயந்து கொண்டே அவர் வீட்டை பூட்டிக்கொண்டு அரக்கோணம் சென்று விட்டார்.

  வனத்துறையினர் விலங்கை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,இரவில் வருபவர்களை மர்ம விலங்கு அல்லது சிறுத்தை கடித்தால் என்ன செய்வது  எனவே வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 ஆனால் வனத்துறையினர் சொல்வதை வைத்துப் பார்கிற பொழுது யாரோ மர்ம ஆசாமிகள் தான் இப்படி பீதியை கிளப்புவதாக தெரிகிறது.