அனுமதியின்றி வெடிகுண்டு பட்டாசு தயாரித்து விற்பனை! இராணிப்பேட்டையில் 12 பேர் காயம்!

அனுமதியின்றி வெடிகுண்டு பட்டாசு தயாரித்து விற்பனை! இராணிப்பேட்டையில் 12 பேர் காயம்!

கு.அசோக்,

 இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த உறவினர்கள் பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை ஆர்.ஆர் சாலையில் சரஸ்வதி அம்மாள் என்கிற மூதாட்டி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடானது.

 பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அவர்களது உறவினர்கள் பட்டாசு வெடித்தவாறு மாலையுடன் ஊர்வலமாக  இறுதி அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போதி பட்டாசில் இருந்து சிதறிய தீப்பொறி சாலையோரம் நின்று இருந்த மற்றொரு உறவினர் குழுவினர் வைத்திருந்த பட்டாசின் மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டது.

  இந்த வெடி விபத்தில் 12 க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

¢இதனை தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

 விபத்து சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து தீக்காயம் அடைந்த நபர்களுக்கு ஆறுதல் தெரிவித்து மருத்துவர்களிடம் அவர்களுக்கு முழுமையான சிகிச்சை வழங்கும் படி அறிவுறுத்தினார்.

  இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இறப்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இராணிப்பேட்டை மாவட்டத்தில் டி.ஆர்.ஓ.கண்காணிப்பில் உள்ள வெடி தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி அனுமதிக்கப்பட்ட டெசிபிள் அலவுதான் பட்டாசு விற்கப்படுகிறாதா? அதே போல் அனுகுண்டு என்கிற பட்டாசு என்பதைப்போல அனுமதி இன்றி தயாரிக்கப்பட்டு இது போன்ற சம்பவங்களில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.