என்னதான் ஆச்சு வேலூர் ஏர்போர்ட்டுக்கு! தடைக்கு என்ன காரணம்!

என்னதான் ஆச்சு வேலூர் ஏர்போர்ட்டுக்கு! தடைக்கு என்ன காரணம்!

 ஜி.கே.சேகரன்,

  விமான நிலையம் பல ஆண்டுகளாக பணி முடிவு பெறாமல் முடங்கியுள்ளதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

  வேலூர்மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் 1934 ஆம் ஆண்டு .உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னர் தலைவர்கள் வருகைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு ஜுலையில் விமான நிலைய ஆணையம் சென்னை பிளையிங்க் கிளப் பயிற்சியாளர்களுக்காக பயிற்சி பெறும் விமான நிலையத்திற்காக வழங்கப்பட்டது.

  அதன் பின்னர் இரண்டு முறை பயிற்சி விமானங்கள் விபத்திற்குள்ளானதால் பயிற்சி விமானங்களை இயக்குவதும் 2011 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.

  2009 ஆம் ஆண்டு இந்த விமான நிலையத்தை 775 மீட்டர் ஓடுபாதையுடன் அமைக்க முடிவு செய்து பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் 2018 ஆம் மீண்டும் விமான நிலைய முழு பயன்பாட்டிற்காக கொண்டு வர 66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமான பணிகளும் நடைபெற்றது.

  இங்கிருந்து மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு முதல் பயணிகள் தங்கும் அறை ஓடுபாதைகள் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்றுள்ளது.

  இங்கிருந்து சென்னை பெங்களூர் திருப்பதி சேலம் கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறிய ரக விமானங்கள் இயக்க முடிவு செய்து பணிகள் நடைபெற்றது.

  ஆனால் இன்னும் 11 ஏக்கர்  நிலம் கையகப்படுத்தபட வேண்டியுள்ளது தற்போது 850 மீட்டர் ஓடுபாதை அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் தகவல் கட்டுபாட்டு அறை ரேடார் கருவிகள் சிக்னல் டவர்கள் பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

  ஆனால் இந்த 11 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்கினால் தான் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று விமானத்தை இயக்க முடியும்.

  ஏற்கனவே தமிழக அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதனால் தற்போது மேற்கொண்டு நிலத்தை வழங்க விவசாயிகள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

 இந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வர தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் விகே சிங்கும் தெரிவித்தார்.

  இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால், வேலூர் ராணிப்பேட்டை,திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை,சித்தூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் குறிப்பாக சி.எம்.சிக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அரியூர் தங்க கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்நிய செலாவணியை ஈட்டி தரும் தோல் தொழிற்சாலைகள் ஏற்றுமதி இறக்குமதி  போன்றவற்றிற்கு இது பயனுள்ளதாக அமையும்.

   பல கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த விமான நிலையம் செயல்படாமலேயே முடங்கி கிடக்கிறது எனவே இந்த விமான நிலையத்தை தமிழக அரசு 11 ஏக்கர் நிலத்தை கூடுதலாக கையகபடுத்தி கொடுத்து இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 விமான நிலையத்தை இயக்க மத்திய அரசு தயாராக இருந்தாலும் மாநில அரசின் பாராமுகத்தால் விமான நிலையம் முடங்கி கிடக்கிறது.

 அவ்வப்போது விமான நிலைய ஆணைய குழுக்களும் பணிகளை வேகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் கூடுதல் இடம் இல்லாததால் பணிகள் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த பகுதியில் முக்கியஸ்தர் என்று சொல்லப்படுபவருக்கான சொத்து ஒன்று உள்ளது. அதை அரசுக்கு அளித்தால் ஏர்போர்ட் திட்டம் முழுமை பெறும். ஆனால் அதை அளிக்க மறுத்து ஏர்போர்ட்டுக்கு அந்த மனிதர் தடைபோட்டுவருவதாக தகவல்.