மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்! பரிதவிக்கும் இளம்பெண்!

ச.செல்வராஜ்,
கர்நாடகாவை சேர்ந்த நாகராஜ்-க்கு திருமணமாகி 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். முதல் மனைவி இறந்ததால் சாந்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நாகராஜ் தனது மூத்த மகள் ஹேமாவதியை சகோதரி மகன் கணேஷ் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில் கணேஷ் மனைவி ஹேமாவதியை விட மாமியார் சாந்தாவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் இதனை ஹேமாவதியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நாளடைவில் கணவர் மற்றும் வளர்ப்பு தாயின் நடவடிக்கையில் ஹேமாவதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எதேச்சையாக கணவரின் செல்போனை எடுத்து பார்த்து போது அதில் தனது கணவரும் வளர்ப்பு தாயும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து கணவர் மற்றும் வளர்ப்பு தாய் இருவரிடமும் சண்டை போட்டுள்ளார்.
அப்படியிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே செல்லலாம் என கூறி ஹேமாவதியை கணேஷ் அழைத்து சென்றார். சென்னகிரி பேருந்து நிலையத்தில் அவரை இறக்கிவிட்டு கடைக்கு சென்று வருவதாக கூறிய கணேஷ், வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.இதனால் ஹேமாவதி, வீட்டுக்கு திரும்பி வந்தார்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் தனது வளர்ப்பு தாய் சாந்தாவும் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்து வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் மாயமாகி இருந்தது.
கணேஷ் - சாந்தா இருவரும் பணம் நகையுடன் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகராஜ் தனது மனைவி சாந்தா மற்றும் மருமகன் கணேஷை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சென்னகிரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் மாமியாருடன் மருமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.