அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை! அமைச்சராக தொடர முடியாது மேல்முறையீடு செய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அப்படி இருக்க, வழக்கை நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரித்து வந்த நிலையில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொன்முடி மற்றும் விசாலாட்சிக்கு எதிரான மூன்று வருட சிறை தண்டனை நிறுத்திவைப்பு என நீதிபதி அறிவித்துள்ளார்.
ஏனெனில் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது..
முன்னதாக நீதிபதி முன் ஆஜரான பொன்முடி நீதியரசரை பார்த்து இருவரும் கூப்பி நாங்கள் சீனியர் சிட்டிசன் என்று தண்டனை குறைத்து வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
தீர்ப்பு வழங்கிய பின்னர் விசாலாட்சியும் தண்டனையை குறைத்து வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆளுங்க கட்சியில் சீனியர் மினிஸ்டர் என்கிற நிலையில் பொன்முடி உள்ளார்.
மேற்படி தீர்ப்பினால் பொன்முடி எம்எல்ஏ என்ற அந்தஸ்தையும் அமைச்சர் அந்தஸ்தையும் இழக்கிறார். அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு விட்டது ஒரே ஒரு வாய்ப்பு மேல்முறையீடு செய்வதற்கு மட்டுமே அவ்வளவு தான்.