திருக்கோவில் சட்டமன்ற தொகுதி எப்போது காலியாகும்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த 1996-2001-ம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு, 2006-11-ல் உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு என 2 வழக்குகள் அவர் மீது இருந்தன. இதில் 2006-11-ல் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி தம்பதியினர் தற்போதைக்கு சிறைக்கு போவது தவிர்க்கப்பட்டிருக்கலாம், ஆனாலும் சில சட்ட பூர்வாமான நடவடிக்கைகளிலிருந்து அவர் விடுபடுவது மிகுந்த சிரமம் என்றே பலரும் கருதுகிறார்கள். அதின் நடவடிக்கை எப்படியிருக்கும் எனில், பொன்முடிக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல், சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த தீர்ப்பை பரிசீலித்து, அமைச்சர் பதவி இழப்பு மற்றும் எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு குறித்து அரசிதழில் சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
பொன்முடியின் எம்எல்ஏ பதவி தகுதி இழப்பு அறிவிக்கப்பட்டதும், அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளதாக அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிடும். இதையடுத்து, 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் சட்டப் பேரவைதொகுதிக்கான தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பொன்முடி அடுத்த 9 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் எம்எல்ஏபதவியில் இருந்து தகுதியிழக்கும் 3-வது அமைச்சர் பொன்முடியாவார். முன்னதாக,தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைக்குச் சென்றார். அப்போது அவர் எம்எல்ஏ பதவி தகுதியிழப்புக்கு உள்ளானதால் முதல்வர் பதவியை இழந்தார்.
அடுத்து, அதிமுக ஆட்சியில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு (ஓசூர்) எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் தகுதியிழப்பு அவரை தூக்கி எரிந்தது. தற்போது, சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடி தகுதியிழப்பை சந்தித்துள்ளார்.
பொன்முடி மீது நிலுவையில் உள்ள வழக்குகள்,
பொன்முடி மற்றொரு வழக்கில்¢ விடுதலை செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மீது மற்ற வழக்குகள் கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது ரூ.1.36 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வேலூர் முதன்மை நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. அந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அதேபோல கடந்த 2006-2011 காலகட்டத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளங்கள் துறை அமைச்சராக பொன்முடி வகித்தபோது, அவரது மகனும் தற்போதைய திமுக எம்பியுமான கவுதம சிகாமணிக்கு, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் செம்மண் எடுக்க, 2007ல் தமிழக அரசுஅனுமதி அளித்தது. அதன்பிறகு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொன்முடி, அவரது மகன், உறவினர் உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அந்தவழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது.
அதுமட்டுமின்றி அமைச்சர் பொன்முடி போலவே தற்போதைய திமுக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி, தங்கம் தென்னரசு அவரது மனைவி மணிமேகலை, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பொன்முடி மீதான தீர்ப்பு வெளியான பின்னர் அமைச்சர் அன்பரன் நீதிமன்றங்களை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். நீதிமன்றங்கள் பாஜக வின் சொல்படி கேட்டு செயல்படுகிறது என்கிற ரீதியில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இது போன்ற காலகட்டத்தில் நீதிமன்றத்தை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.