பி.எம்.டி ஜெயின் பள்ளியில் யோகா தினம்! மண்டலகுழு தலைவர் புஷ்பலதா பங்கேற்பு!

பி.எம்.டி ஜெயின் பள்ளியில் யோகா தினம்! மண்டலகுழு தலைவர் புஷ்பலதா பங்கேற்பு!

 கு.அசோக்,

 சர்வதேச யோகா தினம் முன்னிட்டு, சுவாசம் இயற்கை யோகா மருத்துவமனை, காட்பாடி ரெட்கிராஸ் சங்கம், பி.எம்.டி ஜெயின் பள்ளி, இயற்கை நல வாழ்வியல் இயக்கம், காட்பாடி லயன் சங்கம் இணைந்து யோகா விழிப்புணர்வு பயிற்சி.

  சர்வதேச யோகா நாள் 10-வது ஆண்டு விழா முன்னிட்டு காட்பாடி ரெடகிராஸ் சங்கம், பி.எம்.டி.ஜெயின் பள்ளி, சுவாசம் இயற்கை யோகா மருத்துவமனை, இயற்கை வாழ்வியல் இயக்கம், காட்பாடி லயன் சங்கம், இணைந்து திருமகள் திருமண மண்டபத்திலும், பி.எம்.டி.ஜெயின் பள்ளி வளாகத்திலும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

 நிகழ்சிக்கு பி.எம்.டி.ஜெயின் பள்ளி செயலாளர் கே.ருக்ஜி ராஜேஷ்குமார்ஜெயின் தலைமை தாங்கினார். காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.

 வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்(ஓய்வு) கோபால இராசேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

  விழிப்புணர்வு பயிற்சி யோகா பயிற்சிகளை சுவாசம் இயற்கை யோக மருத்துவமனை மருத்துவர் டாக்டர் இரா.சந்தானலட்சுமி, டாக்டர் எஸ்.குமரன் ஆகியோர்  செய்து காட்டி விளக்கம் அளித்தனர்.

  அப்போது அவர் கூறியதாவது, யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும்.

யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி. என்றார்..  யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள்.

யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.  என்றார் மேலும் பல்வேறு யோக பயிற்சிகள் செயல் விளக்கம் அளித்தார்.

 சர்வதேச யோகா நாள் ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

  2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21 ஆம் நாளை பன்னாட்டு யோகா நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  முதல் சர்வதேச யோகா தினம்  முதல்முறையாக 2015, ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இன்று 10வது ஆண்டு விழா 21.06.2024ல்  நடைபெற்று வருகிறது என்றார்.

  இயற்கை நல வாழ்வில் இயக்கத்தின் தலைவர் ம. தசரதன் இயற்கை வாழ்வியல் மற்றும் யோகா குறித்து பேசினார்.

 செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாராஜேந்திரன், சுவாசம் இயற்கை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஆர்.சுடரொளியன், துணை நிர்வாக இயக்குநர் துர்கா, மற்றும் குழுவினர் மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்கினர்.   

காட்பாடி ரெட்கிராஸ் அவைதுணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் காந்திலால்படேல்,   காட்பாடி லயன் சங்க தலைவர் திலகர், மாவட்ட தலைவர் கே.பிரகாஷ் காட்பாடி காந்திநகர் வியாபாரிகள் சங்க தலைவர் திருமகள் செல்வமணி ஆர்கே அறக்கட்டளையின் இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன், பள்ளியின் துணை முதல்வர் கீதாசுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சியினை செய்தனர்.  மூன்று வயது முதல் 10 வயது வரை உள்ள மாணவர்கள் ஒரு நிமிடத்தில் 27 யோகாசனங்களை செய்து முடித்து சாதனை படைத்தனர்.  மேலும் 30 முதல் 60வயது வரை உள்ள பெண்கள் நடன யோகா நடத்தினர்முடிவில் பள்ளி முதல்வர் எம்.மாலதி நன்றி கூறினார்.