வேலூரில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு! இராணிப்பேட்டையில் கலெக்டர் பங்கேற்காததால் மறியல்!

வேலூரில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு! இராணிப்பேட்டையில் கலெக்டர் பங்கேற்காததால் மறியல்!

 ஜி.கே.சேகரன்

 வேலூரில் திருநங்கைகளுக்கான அடையாளர் அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்து  நலத்திட்டங்களை வழங்கினார். அதே நேரத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இது மாதிரியான நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்கவில்லை என்பதால் திருநங்கைகள் மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

  வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை வாக்காளர் அடையாளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி   துவங்கி வைத்தார். இதில் திரளான திருநங்கைகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

   இவ்விழாவில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கபடும் நீங்கள் யாராவது திருநங்கைகளுக்கு தெரியவில்லை என்றால் தொலைபேசியில் அழைத்து அவர்களுக்கு சொல்லுங்கள் இம்மாவட்டத்தில்200 திருநங்கைகள் உள்ளனா.¢ அவர்களுக்கு அரசு சார்பில் என்ன என்ன உதவிகள் செய்யமுடியுமோ அதனை செய்வோம்.

  வீடு கட்டி கொடுப்பது போன்றவைகள் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு போன்றவைகள் நாங்கள் செய்வோம் அதையும் சமூக நலத்துறை செய்வார்கள் என பேசினார்.

ஆட்சியர் பங்கேற்காததால் ரகளை!

ஜோ,

 இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற

திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொள்ளவில்லை.

 அதை கண்டிக்கும் வகையிலும், திருநங்கைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு சலுகைகள் வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை தரவில்லை எனக்கூறி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 பின்னர் போலிசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.