விஷபாம்பை சர்வசாதாரணமாக பிடித்து வெளியில் அனுப்பிய பெண்!

விஷபாம்பை சர்வசாதாரணமாக பிடித்து வெளியில் அனுப்பிய பெண்!

 ஜி.கே.சேகரன்,

   திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாய சங்கம், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாய சங்கம் இணைந்து ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள பொது கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், 138 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள பொது கால்வாய்வை மீட்டு தர கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அமைப்பாளர் சுதாகரன், சிபிஐ மாவட்ட செயலாளர் சுந்தரேசன், ஏ.ஐ.டி.யு.சி முன்னாள் மாவட்ட செயலாளர் தேவதாஸ் உள்ளிட்ட பல விவசாய சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொன்டனர்.பின்னர் பொது கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் மனுவும் அளித்தனர்.

 இது  குறித்து செய்தி சேகரித்துக்க் கொண்டிருந்த போது மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதி வண்டியில் விஷப்பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  விஷப்பாம்புகள் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிவதால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்   இந்நிலையில் அந்த விஷப் பாம்பை தைரியமாக பிடித்து வெளியில் விட்டு அசத்தினார் ஒரு பெண்.

  மேற்படி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அடிக்கடி விஷ பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வாகன நிறுத்துமிடம் தனியாக அமைக்க வேண்டும் எனவும் அலுவலகம் சுற்றிலும் புதர் போல் உள்ளதை சீர்படுத்த  வேண்டும் எனவும் பலர் வைக்கின்றனர்.