சென்னை சைதாப்பேட்டையில் பெண் வெட்டி கொலை - மக்கள் பீதி!

சென்னை சைதாப்பேட்டையில் பெண் வெட்டி கொலை - மக்கள் பீதி!

உ.சசிக்குமார்,

  சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  வெட்டுபட்ட பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி, பழக்கடை வைத்திருக்கிறார். அவர்  கடற்கரை- தாம்பரம் ரெயிலில் பயணம் செய்து வந்த ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அதே ரெயிலில் இறங்கிய நபர் ஒருவர், ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரெயிலில் தப்பிச் சென்றுள்ளார்.

   படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபரை பிடிக்க முயன்றனர்.

 இந்நிலையில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை குற்றவாளியை தேடி வருகின்றனர்.