கிறிஸ்துமஸ் சீசனிலாவது மாநகராட்சி சுத்தப்படுத்துமா? தேவாலயம்.....பேராயர் முகாம் அலுவலகம் அருகே கெட்டவாடை!

ம.பா.கெஜராஜ்,

டிசம்பர் 25- ஆம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்ததினத்தை உலக கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ்ஸை  கோலாகலமாக வரவேற்க தயாராகிவருகின்றனர்., பரஸ்பரம் பரிசுப்பொருட்களை பரிமாறுதல், தேவாலயங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் கலைகட்டிவருகின்றன.

 அந்த வகையில் வேலூரில் சிஎஸ்ஐ தேவாலயங்களிலும், பேராயர் முகாம் அலுவலகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

 இந்நிலையில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் வெளியில் ஏகப்பட்ட அசுத்தங்களும் ஆக்கிரமிப்புகளும் காணப்படுகின்றன. ஆகவே துர்நாற்றம் வீசுவதால் பிரார்த்தனைக்கு வந்து செல்வோருக்கு இவை பெரும் இடைஞ்சலாக உள்ளது.

 அதே போல் சார்பனாமேடு பகுதியில் உள்ள பேராயரின் முகாம் அலுவலகத்தின் வெளியே பெரிய குப்பை குடோன் போல அசுத்தங்களை கொட்டி வைத்திருக்கிறார்கள். இதனால் முகாம் அலுவலகம் முழுவதும் கெட்ட வாடை வீசுகிறது.

  இந்த பக்கமெல்லாம் எந்த சுத்தம் சுகாதரப் பணிகளை மேற்கொண்டு பழக்கமில்லாத மாநகராட்சிக்கு, இந்த கிறிஸ்துமஸ் சீசனிலாவது கொஞ்சம் சுத்தப்படுத்திக் கொடுத்து, சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்,  அப்படியே மேற்படி இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்து உதவ வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.