இடிந்து விழும் நிலையில் வாட்டர் டேங்க்!

கு.அசோக்,
சோளிங்கர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆபாய நிலையில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வெங்கப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட எம்.பி.குப்பம் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் நான்கு தூண்கள் முழுவதும் சேதம் அடைந்து சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உளளது. இது குறித்து ஏற்கனவே பலமுறை கிராம சபை கூட்டங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.