ஆமை வேகத்தில் வாலாஜா நெடுஞ்சாலை பணிகள்! விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!

ஆமை வேகத்தில் வாலாஜா நெடுஞ்சாலை பணிகள்! விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!

கு.அசோக்,

 வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியில் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை உள்ளது. அங்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக ரூபாய் 13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

 அதனைத் தொடர்ந்து, சாலைகள் விரிவாக்கம் பணி மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கழிவு நீர் கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

 இப்பணிகள் கடந்த சில நாட்களாகவே ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை உள்ள தார் சாலை முழுவதுமாக சேதமடைந்து தற்போது குண்டும் குழியுமாக உள்ளது.

 சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். 

  இது போன்று அப்பகுதியில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

  ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தினை முழுவதுமாக சீர் செய்து, அப்பகுதியில் தற்காலிக சாலை அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா.

¢ மேலும் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் முழுவதுமாக மெத்தன போக்காக நடைபெற்று வருவதால் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.