தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், மாம்பாக்கம் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மான் ஜோன்றம்பள்ளி அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மாட்டு கொட்டகையில் தஞ்சம் புகுந்தது.
இதனை அறிந்த முருகன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் புள்ளிமனை மீட்டு மாம்பாக்கம் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.