சமஸ்கிருதத்தில் சட்ட பெயர்கள் வேண்டாம்! இராணிப்பேட்டை சோளிங்கர் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட நுழைவாயில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்தி, சமஸ்கிருதத்தில் சட்டங்களின் பெயர்களை மாற்றுவதை திரும்ப பெற வேண்டும் என கோரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இந்தி சமஸ்கிருதம் மொழியில் சட்டங்களை பெயர் மாற்றுவதை திரும்ப பெற வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மூத்த வழக்கறிஞர்கள் ரகு ராம்ராஜ், சந்தானகிருஷ்ணன், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற இதில், குற்றவியல் சட்டம் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.