நாங்க இருக்கோம் அச்சமின்றி வாக்களியுங்கள்!

கு.அசோக்,
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலானது முதல் கட்டமாக நடைபெறுகிறது. அதை முன்னிட்டு,அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக காவலர்களின் பேரணி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் காவலர்களின் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில், 100 க்கு மேற்பட்டோர் பேரணியாக சென்று கொடி அணிவகுப்பை நடத்தினர்.
வாக்காளர்கள் 100 % வாக்களிக்கத் தேவையான வசதிகளை காவல்துறை தரப்பில் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த பேரணியில் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
அதேபோல் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சோளிங்கர் நகராட்சி சார்பில் விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையர் கன்னியப்பன் தலைமையில் நடைபெற்றது.இந்தப் பேரணி பேருந்து நிலையத்தில் துவங்கி அண்ணா சிலை, காந்தி ரோடு ,போஸ்ட் ஆபீஸ் தெரு ,சித்தூர் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் வரை முடிவடைந்தது.
இதில் தனியார் கல்லூரி மாணவிகள் நகராட்சி பணியாளர்கள் நூற்றுக்கு கலந்து கொண்டு கட்டாயம் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் , வலிமையான தேசத்தை உருவாக்க 100% வாக்களிக்க வேண்டும், பணமோ ஒரு பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம், நகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.