பிபின்ராவத்துக்கு மகள்கள் இறுதிச்சடங்கு! சூரியன் சந்திரன் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்!மக்கள் முழக்கம்!

பிபின்ராவத்துக்கு மகள்கள் இறுதிச்சடங்கு! சூரியன் சந்திரன் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்!மக்கள் முழக்கம்!

ம.பா.கெஜராஜ்,

  ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு மகள்கள் செய்தனர். இறுதிச் சடங்குகள் செய்யும்போது ஜெனரல் பிபின் ராவத்துக்கு 17-துப்பாக்கிகள் முழங்க சல்யூட் செய்யப்பட்டது.

  பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் டெல்லி கான்ட், பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் தமிழகத்தில் டிச.8 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.  

இந்நிலையில் பிபின்ராவத்தின் உடலுக்கு மகள்கள் தீமூட்டினர்.

தகனம் செய்த பிறகு, அவரது அஸ்தி ஹரித்துவார் கொண்டு செல்லப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தில்லியில் தகனச் சடங்குகள் முடிந்ததும், அவரது அஸ்தியை சனிக்கிழமை ஹரித்வாருக்கு எடுத்துச் செல்ல ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக அவரது மகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.   தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்க தகனத்தில் அவர் அடக்கம் செய்யப்படுகிறார், அங்கு அவரது உடல் 3 காம்ராஜ் மார்க்கில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடங்கு துப்பாக்கி வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

 முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது பலர் அங்கு வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

 மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மனுசுக் மாண்டவியா, ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் அதில் கலந்துக் கொண்டு  பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். 

   அதேபோல் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நராவனே, விமானப்படை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் ஆகியோரும் பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

  உச்சநீதிமன்ற தலைமைத் தளபதி என்.வி.ரமணா பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

  மேலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் இலங்கை, பூடான், நேபால் மற்றும் பங்ளாதேஷ் நாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் பிபின் ராவத் உடல் ஏற்றப்பட்டது.  ராணுவத்தின் கூர்க்கா துப்பாக்கிப்படை பிரிவு சார்பில் பிபின் ராவத் இறுதி ஊர்வல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

   பிபின் ராவத் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தை கண்டதும் வழி நெடுகிலும் திரண்ட மக்கள், தேசியக்கொடியை ஏந்தி சூரியன் சந்திரன் இருக்கும் வரை அவரது பெயர் இருக்கும் என்று கோஷமிட்டவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.