அதுக்கு,,,, மாணவிகளை அழைத்த வழக்கில் இருவர் விடுதலை! நிர்மலாவுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு !

அதுக்கு,,,,  மாணவிகளை  அழைத்த வழக்கில் இருவர் விடுதலை! நிர்மலாவுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு !

 டி.இ.முகமது.

 கடந்த 2018 ஆம் ஆண்டு  மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் பேராசிரியர் நிர்மலா தேவி, மற்றும் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலிசார் விசாரித்தனர்.

  இந்த வழக்கு விருதநகர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் பிறழ் சாட்சியம் அளித்ததால் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர்  விடுதலை  செய்யப்பட்டனர். 

  ஆனால் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றம் புரிந்தவர் தான் என்றும் நாளைக்கு தண்டனையின் விவரம் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.