போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தந்தால் ரகசியம் காக்கப்படும் திருப்பத்தூர் எஸ் பி அறிவிப்பு!

போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தந்தால் ரகசியம் காக்கப்படும் திருப்பத்தூர் எஸ் பி அறிவிப்பு!

நூ.அ.பிலால்,
ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தந்தால் ரகசியம் காக்கப்படும் என்று திருப்பத்தூர் எஸ் பி அறிவித்திருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இன்று (12.10.2024 ) சோதனைகள் நடத்தப்பட்டது. 

 துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மேற் கொண்ட இந்த சோதனையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் 136 கிலோ பக்கோடா பதிவுகள் செய்யப்பட்டது. 
 மணிகண்டன் (வயது 41) என்பவர் நடத்தி வந்த கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பிடிபட்டார். 

மேலும் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடசேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35) என்பவரின் பெட்டிக்கடையில் சுமார் 9 கிலோ குட்கா மற்றும் ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிரத்தினம் (72) என்பவரின் கடையில் சுமார் 500 கிராம் குட்கா பொருட்களும், ஆம்பூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த கவியரசன் (42)  என்பவரது  கடையில் சுமார் 21.1/2 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 

மேற்படி தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேற்கண்ட எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 

இந்நிலையில் தனிப்படை குழுக்களின் சோதனை தொடர்ந்து நடை பெற்றது.

அப்படி இருக்க,திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அவர்களின் வங்கி கணக்கை முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பy guyட்டு வருகிறது. 

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை குறித்த தகவல்களை 91599 59919 என்ற  தொலைபேசி எண்ணில் தெரிவித்து போதை பொருள் இல்லாத  மாவட்டத்தை  உருவாக்க  காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.  இதில் தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.