மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

நூ.அ.பிலால்,
வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல். ஓட்டுநர் கைது செய்து விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியில் கிராமிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் டிராக்டரில் மண் ஏற்றி வந்துள்ளார். இதனை பார்த்த போலீசார் டிராக்டரை நிறுத்தி ராமமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மண் ஏற்றி வந்த டாக்டரை பறிமுதல் செய்யப்பட்டது ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.