எலி வளை தொழிலாளர்களை அழைத்து இதை முன்னமே செய்திருக்கலாமே!

எலி வளை தொழிலாளர்களை அழைத்து இதை முன்னமே செய்திருக்கலாமே!

 ம.பா.கெஜராஜ்,

 சட்டவிரோத செயலை செய்பவர்களாக கருதப்படும் 'எலி வளை சுரங்கத்தொழிலாளர்கள்' உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் மூலம் ஒரே நாளில் உலகலவில் 'ஹீரோக் கள்' ஆகிவிட்டனர்.

 உத்தரகாண்ட் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு அமெரிக்காவின் 'ஆகர்' எந்திரத் தாலேயே உதவ முடியாத நிலையில், சாதாரண, எலி வளை' சுரங்கத் தொழிலாளர்கள் 41 உயிர்களை மீட்டுள்ளனர்.

   நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்ட விரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவதற்காகவே பல குழுக்கள் உள்ளன. அவர்கள் ஒருவர் மட்டுமே நுழையக்கக்கூடிய சுரங்கங்கம் அமைத்து செயல்படுவதில் வல்லவர்கள் ஆவார்கள்.

 அதற்காகவே  இந்த சுரங்கங்கள் 'எலி வளை சுரங்கங்கள்' என்றும், 'எலிவளை சுரங்கத்தொழிலாளர்கள்' என்றும் கூறப்படுகிறார்கள். இந்நிலையில் 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இறுதிக்கட்ட மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

 இந்தப் மீட்புப் பணியை எலிவளை தொழிலாளர்கள் தான் செய்ய முடியும் என்று சுரங்கப்பாதை கட்டுமான பணியை மேற்கொண்ட நவயுகா என்ஜினீயரிங் நிறுவனம் முடிவு செய்தது.

 சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே அந்த இடத்தை நோட்டமிட்ட எலிவளை சுரங்கத்தினர் 10 மீட்டர் இடிபாடுகளுக்குள் 24 மணி நேரத்துக்குள் துளையை ஏற்படுத்தி மீட்டுவிட்டனர். இத்தனைக்கும் அந்த தொழிலாளர்கள் மண் வெட்டி, கடப்பாறை போன்ற போன்ற சிறிய கருவிகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

'எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவி ரோதமாக இருந்தாலும் அது 41 தொழிலாளர்களை அந்தக்குழு பத்திரமாக மீட்டிருக்கிறது.

எலிவளை குழு எப்படி செயல்பட்டது

  சமதளம், மலைப் பகுதியில் எலிவளைபோல குடைந்து சிறிய சுரங்கம் தோண்டுவதில் வல்லவர்களான 'எலி வளை' சுரங்கத் தொழிலாளர்கள் 24 பேர் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த 47 மீட்டர் இரும்பு குழாய் பாதையில் 'எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் நேற்று முன்தினம் (நவ.27) இரவு நுழைந்தனர்.

 ஒருவர் சிறியரக இயந்திரத்தால் சுரங்கத்தை தோண்ட, மற்றொருவர் மண் குவியலை அப்புறப்படுத்தினார். 3-வது நபர் மண் குவியலை அள்ளி டிராலியில் நிரப்பினார். அந்த டிராலி நிரம்பியதும் வெளியே காத்திருந்த தொழிலாளர்கள், கயிறு மூலம் டிராலியை வெளியே இழுத்து மண்ணை அப்புறப்படுத்தினர்.

  முதலில் அனுப்பப்பட்ட 3 'எலி வளை' தொழிலாளர்கள் சோர்வடைந்ததும் அடுத்த மூவர் குழு சுரங்கப் பாதைக்குள் நுழைந்து பணியை தொடர்ந்தனர். இவ்வாறு 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு வெற்றிகரமாக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டன. குழாயில்இருந்து தொழிலாளர்கள் சிக்கியிருந்த சுரங்கப் பாதை பகுதியில்     ஏறி, இறங்குவதற்காக படிக்கட்டு அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 41 தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்கு அந்த குழாய் வழியாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 15 வீரர்கள் ஊர்ந்து சென்றனர். மீட்பு படையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் உள்ளே சென்றார். சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருந்த இடத்தை அவர்கள் சென்றடைந்தனர். பின்னர், அவர்களுக்கு உடல்நல பரிசோதனைகளை மருத்துவர் செய்தார்.

முழு ஆரோக்கியத்துடன் இருந்த தொழிலாளர்கள் குழாய் வழியாக ஊர்ந்து வெளியேறினர்.

ஜனாதிபதி பாராட்டு,

  உத்தரகாசியில் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  உத்தராகண்டின் உத்தரகாசியில் இருந்து யமுனோத்ரி செல்ல106 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிஉள்ளது. இதை 26 கி.மீ. ஆக குறைக்கும் விதமாக, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ.தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 2 கி.மீ. வரை சுரங்கம் தோண்டப்பட்ட நிலையில், கடந்த 12-ம் தேதி தீபாவளியன்று அதிகாலை சுரங்கப் பாதையின் நுழைவுவாயிலில் இருந்து 200 மீட்டர்தொலைவில் திடீரென மண்சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையை மண் மூடியது. உள்பகுதியில் சுமார்ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு மண் சரிவு ஏற்படாததால், அப்பகுதியில் தொழிலாளர்கள் பத்திரமாக இருந்தனர்.

 உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்க முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேல் பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர், டெல்லி, குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மண் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பலவேறு இயந்திரங்கள் பழுதாகின.

  அமெரிக்க தயாரிப்பான ஆகா ¢இயந்திரம் மட்டும் மண் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தியது. ஆனால், அதிவேகமாக இயக்கியதால் அமெரிக்க இயந்திரம் கடந்த 25-ம் தேதி உடைந்தது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த அந்த இயந்திரத்தின் 14 அடி நீள பிளேடு அறுக்கப்பட்டு முழுமையாக அகற்றப்பட்டது.

  இதற்கிடையே, மாற்று திட்டங்களும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே எலிவளை தொழிலாளர்கள் களத்தில் இறக்கப்பட்டு வெற்றிக் கொடியேற்றியிருக்கிறார்கள்.