தாயை தாறுமாறாக தாக்கிய மகன்! வேடிக்கைப் பார்க்கும் போலிஸ்!!

ஜி.கே.சேகரன்,
முன்னாள் ராணுவ வீரர் தாக்கியதில் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கதறல்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம், ஜங்காலபுரம் பகுதியில் வசிப்பவர் அப்பாவு, இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு மார்கபந்தீஸ்வரன், லோகேஷ்வரன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தந்தையை லோகேஸ்வரன் பராமரித்து வருகிறார். அப்படியிருக்க லோகேஸ்வரனுக்கு மட்டும் இரண்டு ஏக்கர் நிலத்தை அவரது தந்தை எழுதி வைத்துள்ளாதாக கூறப்படுகிறது.
அதேபோல் இன்னொறு மகன் மார்கபந்தீஸ்வரனுடன் தாய் தனலட்சுமி வசித்து வந்த நிலையில் லோகேஸ்வரன் தனலட்சுமியிடம் சென்று உனது பெயரில் இருக்கும் இடங்களை தனக்கு எழுதி வைக்கப் கோரி தகாத வார்த்தைகள் கூறி தாய் என்றும் பாராமல் நெஞ்சின் மீது காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தனலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் மார்கபந்தீஸ்வரர் தாய் தனலட்சுமியை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகிறார் மூதாட்டி தனலட்சுமி.
தாயை தாக்கிய லோகேஷ்வரன் முன்னால் ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.