அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம்! அமைச்சர் மா.சுப்பிரமணி பெருமிதம்!

அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம்! அமைச்சர் மா.சுப்பிரமணி பெருமிதம்!

 க.பாலகுரு,

  இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.

  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுபிரமணியன் திறந்து வைத்தார்.

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் புதிய சுகாதார கட்டிடம் மற்றும் குளிக்கரை பகுதியில் செவிலியர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு ஆகியவற்றினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன்  திறந்து வைத்தார்.

 இதே போல திருவாரூர் மாவட்டத்தில் வடகண்டம், உத்தமதானபுரம், கண்டியூர், நுணாகாடு, தீபங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எட்டு மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

 இதற்காக திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

 பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன்... . பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன்,

   இந்திய வரலாற்றில் இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 237, தனியார் 457 ஆஸ்பத்திரிகள் என 694 ஆஸ்பத்திரிகளில் இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 256 விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

  அதற்காக 2 ஆண்டுகளில் மட்டும் அரசு ரூ.221 கோடியே  11லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சை உதவி ரூ ஒரு லட்சம் என்பது ரூ. 2 லட்சமாக உயர்த்தபடும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

    வரும் ஜூலையில் இது நடைமுறைக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ வசதிக்கென சுமார் 2 ஆயிரத்து 500 கட்டடங்கள் கட்ட திட்டமிட்டு இருவரை ஆயிரத்து 100 க்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் கட்டி பயனுக்கு தரப்பட்டுள்ளது என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ், தாட்கோ தலைவர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் (சேகர்)கலியபெருமாள் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஹேமசந்த் காந்தி, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.திலகம், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ முதல்வர் மரு.ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.