டாக்டரின் மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த குதிரை பயிற்சியாளர் உடபட இருவர் கைது!

டாக்டரின் மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த குதிரை பயிற்சியாளர் உடபட இருவர் கைது!

  க.பாலகுரு,

பிரபல மருத்துவரின் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த குதிரை ஏற்ற பயிற்சியாளர் உட்பட இருவர்  கைது செய்யப்பட்டனர்.

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரபல டாக்டரின் 14 வயது மகள் அங்குள்ள ஆலடிக்குமூலை பைபாஸ் சாலையில் உள்ள மையத்தில்  குதிரை ஏற்றம் பயிற்சி பெற்றுவந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு தமிழரசன் என்பவர் பயிற்சி கொடுத்து வந்தார்.

  அவர், மற்ற மாணவிகள் சென்ற பின்னர் டாக்டர் மகளை மட்டும் கூடுதல் நேரம் இருக்கச் சொல்லி பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் தமிழரசன் ஈடுபட்டுள்ளார்.

  கடந்த ஒரு வருடமாக மாணவிக்கு அடிக்கடி போன் மூலமாகவும் பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறுமி, இது பற்றி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவர், குதிரை பயிற்சி மைய உரிமையாளர் ராஜ்குமாரை கண்டித்துள்ளார்.

  ஆனால் இதை உரிமையாளர் கண்டு கொள்ளாமல் பயற்சியாளருடன் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் வெளியில் சொன்னால் அசிங்கப்படுத்தி விடுவோம் என்று டாக்டரிடம் பணம் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.