அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த பேராசிரியர்!

அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த பேராசிரியர்!

 த.நெல்சன்,

 வேலூரின் மையப்பகுதியில் ஒரு கலைக்கல்லூரி உள்ளது. அரசு உதவி பெற்று செயல்படும் அந்த கல்லூரியில் குற்றப்பின்னணி கொண்ட ஒரு பேராசிரியர், பெரிய பதவியை அடைவதற்காக பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறார்.

    நிர்வாகத்தை மிரட்டும் பாணியில் கடந்த காலங்களில் செயல்பட்ட அவர், ஒழுக்கக்கேடான நபர் என்று உடன் பணிபுரிபவர்கள் சொல்கிறார்கள்.

   அந்த வகையில் தனக்கு இஷ்டமான ஒரு அப்பாவி பெண்ணை உடன் பணியமர்த்திக் கொண்டு கும்மாளம் அடித்து வந்த அவர், தற்போது அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் அதை சூதானமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

 இதனால் மனம் வெறுத்த அந்த அப்பாவி பெண் கல்லூரியில் இருந்து விலகிக்கொண்டார்.

  அந்த பெண் ஏற்கனவே பத்து லட்சம் ரூபாவை அந்த தில்லாலங்கடி பேர்வழிக்கு கொடுத்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் தற்போது அந்த பிரச்சனை காவல் துறையின் பார்வைக்கு செல்லவிருப்பதாக தகவல்.

  இதெல்லாம் அந்த கல்லூரியில்  காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் நிலையில்  ச்சே... அன்பில்லாதவன் என்று அவரை பலரும் திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.