வெட்டப்பட்ட எட்டு விரல்களும்-பழிக்குபழி கொலையும்!

கு.அசோக்,
பிரபல ரவுடி வயல்வெளியில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது - கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 8ல் விரல்கள் வெட்டப்பட்டதற்கு அதே நாள் 2025ல் கொடூரமாக வெட்டி கொன்ற பகீர் சம்பவம்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தில் நேற்று பிரபல ரௌடியான சீனு (எ) சீனிவாசன் வயல் வெளியில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனு (எ) கிருஷ்ணகுமார்(50). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் கோழி பண்ணை மற்றும் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம், வேலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரை பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக அழைத்துச் சென்று எட்டு விரல்களை வெட்டியதால் இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் மார்ச் 8, அதே நாளில் திட்டமிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய, மேல்வேலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(30), ரஞ்சித்(32), திமிரியை சேர்ந்த இளவரசன்(22), ஆகாஷ்(21), சோளிங்கர் ஐப்பேடு பகுதியை சேர்ந்த கோபி(25), பானவரம் பகுதியை சேர்ந்த மோகன்(21) நிர்மல் (25) திருத்தணி கார்த்திக் (25 ) ராணிப்பேட்டை மேல்வேலம் ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.