ஒப்புதல் தந்துவிட்டு இப்படி மாற்றி பேசலாமா? தமிழக அரசின் கடிதத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

ஒப்புதல் தந்துவிட்டு இப்படி மாற்றி பேசலாமா? தமிழக அரசின் கடிதத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

ம.பா.கெஜராஜ்,

பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தெடர்பாக நாடாளுமன்றத்தை  தவறாக வழிநடத்தினார். இப்படித்தான்  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர். 

 இந்நிலையில்  பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 இது குறித்து தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில்,  நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தில் நான் உறுதியாக உள்ளேன்.

  கடந்த 2024-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஒப்புதல் தெரிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவிப்பது ஏன்? என்று குறிப்பிட்டுள்ளார்.