டுமீல்..... வனச்சரக அலுவலரின் துப்பாக்கியை திருடிய வனக்காப்பாளர் கைது!

கு.சக்திவேல்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை காப்பு காட்டில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தவர் முனியப்பன். கோலாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த இவர். வனச்சரக அலுவலர் ரகுபதி என்பவரின் துப்பாக்கியை அபேஸ் செய்துவிட்டார்.
கடந்த 7-ஆம் தேதி இந்த துப்பாகி அலுவலகத்தில் இருந்து காணாமல் போய் உள்ளது. வனச்சரகர் இரண்டு நாட்களாக தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
பின்னர் ரகுபதி அலுவலக பணியாளர்களை விசாரணை செய்தார், விசாரணையில் வனக்காப்பாளர் முனியப்பன் மீது சந்தேகம் எழுந்தது.
அவரை உரிய வகையில் கவனித்ததில், துப்பாக்கியையும் ஐந்து தோட்டாக்களையும் எடுத்து அவரது சொந்த ஊரான கோலாந்தாங்கல் பகுதியில் உள்ள வக்கப்போரில் மறைத்து வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டார்
அதைத் தொடர்ந்து கோலாந்தாங்கல் பகுதியில் சோதனையிட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த கிளாக் 17 (செவன்டின்)கை துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாவை பறிமுதல் செய்த வனத்துறையினர்
இதுகுறித்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் செங்கம் காவல்துறையினர் வனக்காப்பாளர் முனியப்பனை கைது செய்தனர்.
இது குறித்து முனியப்படன் தெரிவிக்கையில் துப்பாக்கி பயிற்சி செய்வதற்காக வனச்சரகு அலுவலருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றதாக தெரிவித்ததாக சொன்னாராம்.
செங்கம் வனச்சரக அலுவலகத்தில் வனக்காப்பாளரே வனச்சரக அலுவலரின் துப்பாக்கியை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.