. சத்து திரவம் வழங்கிய கலெக்டர்!

. சத்து திரவம் வழங்கிய கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,

 வேலூர்மாவட்டத்தில் வைட்டமின் ஏ உயிர் சத்து திரவம் அளிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்

   வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில்  அங்கன்வாடி மையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்ட முகாம் இன்று துவங்கப்பட்டது.

  இதனை ஆட்சியர் துவங்கி வைத்தார்.  நேற்று முதல் வைட்டமின் ஏ திரவம் அளிக்கும் இம்முகாம் வரும் 22 ஆம் தேதி வரையில்  நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் நடக்கிறது.

  துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மூலமாக சுமார் 1244 பணியாளர்கள் மூலம் சுமார் 98.,229  குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கபடவுள்ளது.

  இந்த வைட்டமின் குறைபாடுகளால் மாலைக் கண், பார்வை இழப்பு, வயிற்று போக்கு நிமோனியா உள்ளிட்டவைகள் ஏற்படும், எனவே ஊட்டசத்து குறைபாடுகளிலிருந்து பாதுகாத்துகொள்ள திரவ சொட்டு மருந்தை அளிக்குமாறு ஆட்சியர் கேட்டுகொண்டார்.