அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மனு!

அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மனு!

கு.அசோக்,

தமிழ்நாடு அரசுக்கு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு எல்.சி.ஓ வழங்கக்கூடாது என தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்.

  அந்த மனுவில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு  எல்.சி.ஓ வழங்குவதை தடுக்க கோரியும், வாடிக்கையாளருக்கு அரசு பாக்ஸ் இல்லாததால் தனியார் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில் அதை எடுத்துவிட்டு அரசு பாக்ஸ் போட வேண்டும் என நிர்பந்திப்பதை தடுக்க வேண்டும்  என குறிப்பிடப்பட்டு இருந்தது.