பாதியில் படிப்பை விட்ட மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்த்த கலெக்டர்!

பாதியில் படிப்பை விட்ட மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்த்த கலெக்டர்!

 ஜி.கே.சேகரன்,

 இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கும் நிகழ்ச்சி நடந்தது இதனை வட்டார அளவில் நடத்தவுள்ளோம் மாணவ,மாணவிகள் கல்வி கற்பதை 12 ஆம் வகுப்புடன் நிறுத்தி விட கூடாது நன்றாக படிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி விழாவில் பேச்சு.

 வேலூர்  மாவட்டம், வேலூரில் உள்ள ஊரிசு கல்லூரியில் உயர்வுக்கு படி என்ற 12 ஆம் வகுப்புடன் இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்கும் நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி முன்னிலை வகித்தார்.

 இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில், முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ,மாணவிகள் கல்லூரியில் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்கள்

 இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில், உயர்வுக்கு படி நிகழ்ச்சி மூலம் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி,வேலூர் குடியாத்தம் ஆகிய இடங்களில் இடைநின்ற பள்ளி மாணவர்களை உயர் கல்வி படிக்க வைக்க சேர்க்கப்பட்டது.

 இதன் மூலம் 12 ஆம் வகுப்புடன் நின்ற மாணவர்களும் உயர் கல்வியை பெற முடியும். மேலும் நீங்கள் 12 ஆம் வகுப்புடன் இடைநின்றுவிடாமல் உயர் கல்விக்கும் கல்லூரிகளில் படிக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் உங்களுக்கு உயர்வை தரும் மேலும் இந்த உயர்வுக்கு படி நிகழ்ச்சியை அடுத்த கட்டமாக வட்டார அளவிலும் நடத்தவுள்ளோம் என பேசினார்.

  இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.