பெண்ணை காப்பாற்ற சென்ற வாலிபருக்கு கத்தி குத்து- ஸ்பாட் அவுட்!  வெட்டுபட்ட ரியல் எஸ்டேட்காரர்!

பெண்ணை காப்பாற்ற சென்ற வாலிபருக்கு கத்தி குத்து-  ஸ்பாட் அவுட்!  வெட்டுபட்ட ரியல் எஸ்டேட்காரர்!

ஜி.கே.சேகரன், 

 பெண்ணை காப்பாற்ற சென்ற வாலிபருக்கு கத்தி குத்து- சம்பவ இடத்தில் வாலிபர் உயிரிழப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல் சொத்துக்காக ரியல் எஸ்டேட்காரருக்கு கத்தி வெட்டு விழுந்துள்ளது.

   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்த கிரண் குமார் (50) இவருடைய மனைவி துர்கேஸ்வரி வயது (44)சில வாரங்களுக்கு முன்பு துர்கேஸ்வரி மற்றும் சண்முகம் ஆகிய இருவருக்கும் இடையே வாய் சண்டை இருந்துள்ளது.இதனால் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்து மது அருந்துவதை கைவிடுமாறு துர்கேஸ்வரி பலமுறை கூறியும் கண்டுகொள்ளாத சண்முகம்,தொடர்ந்து வீட்டு முன்பே மது அருந்திக் கொண்டிருந்தார்.

  ¢ இதனை துர்கேஸ்வரி தட்டி கேட்டபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு இருவரையும் குத்த முயன்றார். அப்பொழுது லக்கிநாயக்கன் பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் வல்லரசு என்பவர் அதனை தடுக்க சென்று போது சண்முகம் அவரை குத்தியதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் அறிந்த துர்கேஸ்வரி உடனடியாக திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்தா£.¢ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய போலீசார் வல்லரசுவின் உடலை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தனது வீட்டிற்கு முன்பு மது அருந்தக்கூடாது என கூறியதின் காரணமாக தன்னை கொலை செய்த வந்த இடத்தில்   காப்பார்த்த வந்தவரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 ரியல் எஸ்டேட் அதிபருக்கு அரிவாள் வெட்டு

 திருப்பத்தூர் மாவட்டம், அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.  இவருக்கும், இவரது சித்தப்பாக்களுக்கு சொந்தமான பரம்பரை சொத்து புளுகன வலசை கோடியூர் பகுதியில் உள்ளது. 

 சுமார் 5 ஏக்கர் அளவுள்ள அந்த நிலத்தை பார்வையிட சென்ற போது அதே பகுதியை சித்தப்பாவின் மகன்களான குடியன், கோவிந்தன், கண்ணன், லிங்கம்மாள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பன்னீர்செல்வத்தை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

 அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்திற்காக தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். தன்னையும் தன் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.