தொண்டு நிறுவனத்தில் செம்மரக்கடைகள் பதுக்கல்!

கு.அசோக்,
திருவலம் அருகே தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது,
வேலூர்மாவட்டம்,திருவலம் அருகே ராமநாதபுரம் செல்லும் சாலையில் கருணை இல்லம் என்ற தொண்டு நிறுவனம் உள்ளது. இதற்கு சொந்தமான இடத்தில் புதரில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு பேனர்கள் மூடிவைக்கப்பட்டுள்ளதாகவும் திருவலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது 10 செம்மரக்கட்டை துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த செம்மரக்கட்டைகளை திருவலம் போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த செம்மரக்கட்டைகளை பதுக்கியவர்களை போலீசாரும் வனத்துறையினரும் தேடி வருகின்றனர்
திருவலம் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்துவது வாடிக்கையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.