பாம்பை கடித்தவர்கள் கைது!
கு.பிரணேஷ்,
அரக்கோணம் அருகே தண்ணீர் பாம்பை பிடித்து கொடூரமான முறையில் வாயால் கடித்து கொடூரமான முறையில் துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று வாலிபர்களை வனசரக அலுவலர்கள் கைது செய்து நடவடிக்கை.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர் மோகன், அப்பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சூர்யா(21) மற்றும் சந்தோஷம் (21) ஆகிய இருவருடன் சேர்ந்து குள்ளத்தில் இருந்த ஒரு தண்ணீர் பாம்பை பிடித்து அதை கொடூரமான முறையில் துன்புறுத்தி கொன்று அந்தப் பாம்பை வாயால் கடித்து வீடியோவாக உருவாக்கி அதனை பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் வனவிலங்குகளுக்கான குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வைல்ட் லைஃப் கிரைம் கண்ட்ரோல் என்ற வனச்சரக துறையினர்கள் இதனைக் கண்டு ஆற்காடு வனசரக ரேஞ்சர் அலுவலர் சரவணன் பாபு அவர்களிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பாம்பை பிடித்து கொடூரமான முறையில் வாயால் கடித்து துன்புறுத்திய மூன்று வாலிபர்களை இருக்கும் இடத்தை கண்டறிந்து மூவரையும் ஆற்காடு வனசரக அலுவலர்கள் கைது செய்து தற்போது தீவிரமான முறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வனவிலங்குகளை துன்புறுத்துதல் வனவிலங்குகளுக்கு மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.