அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்தார்! பரபரப்பு தகவல்கள்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்தார்! பரபரப்பு தகவல்கள்!!

ம.பா.கெஜராஜ்

அமைச்சர் இலாகா மாற்றம் தொடர்பான பரிந்துரையை ஆளுநர்  ஆர். என். ரவி நிராகரித்து அதிரடி காட்டி இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் ஓமந்தூரார்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து தற்போது காவிரி மருத்துவமனைக்கு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார.

இந்நிலையில் அவர் வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறை ஆகிய இரண்டையும் அவரிடமிருந்து மாறுதல் செய்து சீனியர் அமைச்சர்களுக்கு கொடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார்.

அதன்படி மின்சாரத்துறை ஏற்கனவே அமைச்சராக உள்ள தென்னரசுவுக்கும், மதுவிலக்கு துறையை சீனியர் அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்குவதாக தெரிவித்து அதனுடன் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் குறிப்பிட்டு அதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அனுப்பி வைத்தார்.

அந்தப் பரிந்துரையை படித்துப் பார்த்த ஆளுநர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் தகவலை அந்த பரிந்துரையில் குறிப்பிடாமல் விட்டு இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி முதல்வரின் பரிந்துரையை நிராகரித்தார்.

ஆகவே இன்று இரவு அல்லது நாளையோ அந்த பரிந்துரையானது திருத்தப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு முதல்வர் அளிப்பார் என்று தெரிகிறது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சராவிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயக்குமார் ஆளுநரை சந்திக்க சென்றார்.